தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 10ம் வகுப்பு மாணவன் ராஜ்பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பெற்று வந்த ராஜ்பாலாஜியின் உடலில் உப்பு அதிகமாக இருந்ததால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.