தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இன்று 35 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதோடு பெங்களூரு, மும்பை, விஜயவாடா, புவனேஸ்வர், கோழிக்கோடு மற்றும் திருச்சியில் இருந்து சென்னை வந்த விமானங்கள் மழையின் காரணமாக தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்தபடி இருந்ததால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். மேலும் சில விமானங்கள் திரும்ப அனுப்பப்பட்டது. இதன் காரணமாக தற்போது 35 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.