சென்னை, கொரட்டூரில் திடீரென்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து, தூங்கிக் கொண்டிருந்த 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் குடும்பத்துடன் சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நில அதிர்வு எத்தனை ரிக்டர் அளவில் பதிவானது என்பது குறித்து எந்த தகவல் வெளியாகவில்லை. சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.