NLC-க்கு எதிராக பாமக நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 28 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கைதானவர்களில் 2 சிறார்கள் இருந்ததால், அவர்களை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். கலவரத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அடிப்படையில் மேலும் சிலரை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.