தலைநகர் சென்னையில் ஒரே இரவில் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. செங்குன்றத்தில் சத்யா என்ற 22 வயது நபர் மர்ம நபர்களால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மந்தைவெளி பகுதியில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது.