தமிழகத்தில் திமுக ஆட்சியில் இதுவரை 1030 கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக புகைப்படங்கள் அடங்கிய புத்தகம் விரைவில் வெளியிடப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நேற்று 1000வது கோவில் கும்பாபிஷேக சென்னை மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெற்றது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.