தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் மொத்தம் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைப்பேசி செயலி மூலமாக பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக செப்டம்பர் 11ஆம் தேதி இன்று முதல்வர் ஸ்டாலின் இறுதி கட்ட ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதே சமயம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சுமார் 5 லட்சம் பேரில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று இது குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.