அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை டிசம்பர் நான்காம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நிலையை காரணம் காட்டி ஜாமின் வழங்க வேண்டும் என அவரது தரப்பு வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது டிசம்பர் நான்கு வரை செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.