செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 21 வது முறையாக நீட்டிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 21 வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய நீதிமன்ற காவல் அவ்வப்போது நீடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த முறை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், புழல் சிறையிலிருந்து காணொளி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை வரும் 20ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 21 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.