தர்மபுரி குமரி பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் சமீபத்தில் எண்ணப்பட்டது. அப்போது பக்தர் ஒருவர் தனக்கு இருக்கும் கடன் விவரத்தை குறிப்பிட்டு கடவுளுக்கு கோரிக்கை கடிதம் எழுதியது வைரலாகி வருகின்றது. உண்டியலில் பணத்துடன் இருந்த கடிதத்தை, காணிக்கையை எண்ணுபவர்கள் எடுத்து படித்துள்ளனர்.

அதில், யார் யாருக்கு எவ்வளவு கடன் தர வேண்டும், நகை கடன், சங்க கடன் மற்றும் வீட்டுக் கடன் எவ்வளவு தொகை என தனித்தனியாக தொகை எழுதியுள்ளார். மொத்தம் ஒரு கோடி ரூபாய் கடன் பிரச்சனையை தீர்த்து வை முருகா என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ள நிலையில் தற்போது அந்த கடிதம் வைரல் ஆகி வருகிறது.