அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை மேலும் 5 நாட்கள் விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறையினர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியிடம் 5 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.