தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீரென்று உடல்நல குறைவால் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு தற்போது ஓய்வெடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவளின் உடல் நிலையை தற்போது மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்திலிருந்து தர்மபுரி மாவட்டம் வழியாக கிருஷ்ணகிரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று காரில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.