தஞ்சையில் லாரியும் பைக்கும் மோதியதில் தந்தை, மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னே சென்ற டாரஸ் லாரியை முந்த முயன்ற போது எதிரே வந்த பைக் மீது மோதி கீழே விழுந்தனர். இதில் பின்னால் வந்த டாரஸ் லாரி ஏறி இறங்கியதில் தந்தை மற்றும் நான்கு வயது மகள் உயிரிழந்த நிலையில் தாய், ஆறுமாத பெண் குழந்தை படுகாயத்துடன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.