அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி பொருட்களை  இணையதளம் மூலமாக பெரும் புதிய வசதியை தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சியானது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடைபெற்றது. இணையதளத்தின் மூலமாக இளைய சமுதாயத்தினர் அதிக அளவில் மகளிர் சுய உதவி குழுக்களின் பொருட்களை பெற முடியும்.

மேலும் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை அனைத்து தரப்பினரும் வாங்க ஏதுவாக சென்னை அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மதி அங்காடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் சிற்றுண்டி உணவகமும் உள்ளது.