இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்தனர். மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அமைச்சர் நிர்மலாவிடம் மீனவர்கள் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க 22 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.