சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதற்கு எதிராக ML ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் தலையிட முடியாது என தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து ML ரவி இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.