கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை மற்றும் நெல்லை இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் எழும்பூரில் இருந்து வியாழக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், சிதம்பரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் வழியாக காலை 8.30 மணிக்கு நெல்லை சென்றடையும். மறு மார்க்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.