தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கு நிலையில் அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கை காட்டுபவரே இந்தியாவில் அடுத்த பிரதமராக பதவி ஏற்பார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

பிச்சனூரில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். பிரதமர் வருவதால் தமிழகத்தில் மக்களிடம் எந்த மாற்றமும் ஏற்படாது. தமிழகம் முழுவதும் திமுக அலை வீசுகின்றது. வடக்கில் இந்தியா கூட்டணி அலை வீசுகிறது. நிச்சயம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.