தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நிறுவு நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் சொந்த மகன் மற்றும் மகளுக்கு இடையே பாரபட்சம் காட்டும் முதல்வர் ஸ்டாலின் முதலில் தனது வீட்டில் சமூக நீதியை நடைமுறைப்படுத்தட்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

திருவள்ளூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், பெண்ணுரிமை, சமத்துவம், சம உரிமை, இட ஒதுக்கீடு மற்றும் ஜனநாயகம் என மேடைகளில் வசனம் பேசும் ஸ்டாலின் தனது மகனை மட்டும் அமைச்சராக்கி உள்ளார், அவர் ஏன் தனது மகளை அரசியலுக்கு கொண்டு வரவில்லை என விமர்சித்துள்ளார்.