சமீபத்தில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை காவலில் எடுத்து விசாரிக்க EDக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த கைது சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரியும், இதை அவசர வழக்காக விசாரிக்க கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீத்திமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இதை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள மறுத்துள்ள நீதிமன்றம், புதன்கிழமை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது