அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பேசிய அவர்கள், “தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற கூடாது என்ற நோக்கில் தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். பாஜகவின் சூழ்ச்சி அரசியலை தேர்தல் ஆணையத்திடம் புகாராக தெரிவித்துள்ளோம். இதன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றனர்.