மஹாராஷ்டிராவின் அகமத் நகரில் இருந்து அஸ்தி நகருக்கு சென்ற புறநகர் பயணிகள் ரயில் திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் உடனடியாக வெளியேறியதால் பெரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிலருக்கு சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அடுத்தடுத்த பெட்டிகளுக்கு பரவிய தீயால் 5 பெட்டிகள் மொத்தமாக எரிந்து நாசமானது. விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்