தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் சிமெண்ட் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதிலிருந்த ஆறு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். குற்றாலத்தில் குளித்துவிட்டு காரில் சொந்த ஊர் திரும்பிய போது விபத்து நிகழ்ந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்த ஆறு பேரும் புளியங்குடியை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.