தமிழகத்தில் நான்கு நாட்கள் தொடர் விடுமுறையில் சொந்த ஊர் சென்றவர்கள் ஊர் திரும்புவதற்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோவை – சென்னை , கன்னியாகுமரி மற்றும் சென்னை இடையே இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. கோவை மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் ரயில் காலை 11.30 மணிக்கு, குமரி மற்றும் சென்னை ரயில் இரவு 8.30 மணிக்கு இயக்கப்பட உள்ளது. கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.