திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கோபால், திமுக கூட்டணியில் தொடர்ந்து இருப்பதற்கான எதிர்ப்பை தெரிவித்து, பாஜகவில் இணைந்துள்ளார்.
சென்னை ராஜ்பவனில் பாஜக சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், தமிழக பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அவர் பாஜகவில் சேர்ந்து கொண்டார். அவரது கட்சிப்பெயர்ச்சியானது, எதிர்க்கட்சியான காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், திமுக எம்பி திருச்சி சிவா, காமராஜரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்ததாக கோபால் குற்றம் சாட்டினார். இதுவரை திருச்சி சிவா மன்னிப்பும் கேட்கவில்லை என்றும், அதுபோன்ற நிலைமையிலும் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்வது தான் ஏற்க முடியாதது எனவும் தெரிவித்தார். இந்நிலையில், கோபால் பாஜகவில் இணைந்தது, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்களிடையே சலசலப்பையும், கருத்து வேறுபாடுகளையும் உருவாக்கியுள்ளது.
தேசிய நீரோட்டத்திற்கு வரவேற்கிறோம்.!
எனது ஏற்பாட்டில் திருப்பூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக பணியாற்றிய எனது மாமா திரு. V. கோபால் அவர்கள், இன்று தன்னை மாநில தலைவர் @NainarBJP அண்ணா, முன்னாள் மாநில தலைவர் @annamalai_k அண்ணா, தேசிய மகளிர் அணி தலைவர் அன்பு… pic.twitter.com/yb2O2g9qvc
— SudhamaniBJP (@sudhamanibjp) July 18, 2025
“>
