மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு தொகுதி கூட கொடுக்கமாட்டேன் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஒரு MLA கூட இல்லாத காங்கிரசுக்கு 2 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்க முன்வந்ததாக கூறினார். ஆனால், கூடுதலாக தொகுதிகள் வேண்டும் என காங்கிரஸ் கேட்பதாகவும், ஒரு தொகுதி கூட கொடுக்க முடியாது எனவும் தெரிவித்தார். தங்களது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.