விருத்தாசலத்தில் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த கவுன்சிலர் பக்கிரிசாமி மீது குண்டாஸ் பாய்ந்தது. பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் – எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் இடையே சட்டமன்றத்தில் காரசாரமாக விவாதம் நடந்தது. இதனையடுத்து, பக்கிரிசாமி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.