தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவை சஸ்பெண்ட் செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் 2 மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பிக்களும் பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.