சென்னை நந்தம்பாக்கத்தில் முதலாமாண்டு கல்லூரி மாணவியின் கழுத்தில் கத்தியால் குத்திய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காதலிக்க மறுத்ததால் நவீன் என்ற இளைஞர், நடந்து சென்ற கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளான். இதில் பலத்த காயமடைந்த மாணவி நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து தப்பியோடிய நவீனை காவல்துறையினர் விரட்டிப்பிடித்தனர்.