ஒரே நாடு ஒரே நாடு தேர்தல் விவகாரத்தில் இபிஎஸ் திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார் என ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தலை அதிமுக ஆதரிப்பதாக கடந்த செப்டம்பரில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட இபிஎஸ், தற்போது கொள்கையில் இருந்து மாறி “அந்தர் பல்டி” அடித்துள்ளார்; வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இபிஎஸ்சின் துரோகக் கூட்டம் (அதிமுக) 4வது இடத்துக்கு தள்ளப்படும் எனக் கடுமையாக சாடியுள்ளார்.