புத்தாண்டு தினமான இன்று, தமிழகத்தில் அடுத்தடுத்து கோர சம்பங்கள் நடந்துள்ளன. இன்று காலையில் ஆம்பூரில் கோர விபத்து நடந்த நிலையில், தற்போது திருச்சி ரயில் நகரில் வீட்டின் சிமென்ட் கூரை பெயர்ந்து விழுந்ததில் ஒரு குடும்பமே உயிரிழந்தது தமிழகத்தை உலுக்கியுள்ளது. இன்று அதிகாலை ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்து என்பவர் வீட்டின் மேற்கூரை விழுந்ததில், தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.