நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கும், நாளை அதிகாலை வேளைகளில் லேசான பனிமூட்டத்திற்கும் வாய்ப்புள்ளது என்றும், குமரிக்கடல், மன்னார் வளைகுடா ஆகிய கடல் பகுதிகளில் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது