ஒடிசாவில் பர்கார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சுண்ணாம்புக் கல் ஏற்றிச் சென்ற இந்த சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டது. இந்த விபத்தில் உயிர்சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இதுதொடர்பான கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.