அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை பெற்றோர்கள் கட்டாயம் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி, ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து, வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் மாணவர்களுக்கான திட்டங்கள் குறித்து தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.