இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில் நாமக்கல் தொகுதிக்கு கொமதேக சார்பில் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பதிலாக மாதேஸ்வரன் என்பவர் வேட்பாளராக மாற்றப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்ற கொமதேகவுக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது. வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில் ஜாதிய வன்முறையை தூண்டும் வகையில் சூரியமூர்த்தி பேசும் பழைய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவர் தற்போது மாற்றப்பட்டுள்ளார்.