வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரி, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கவும், படிவம் ஏ மற்றும் பி -இல் கையெழுத்திடும் அதிகாரத்தை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இது இபிஎஸ்-க்கு புதிய தலைவலியாக அமைந்துள்ளது.