மின்கட்டணம் செலுத்த 4 மாவட்டங்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் 18ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மின் நுகர்வோர் டிசம்பர் 4 முதல் 6 வரை அபராதம் செலுத்தி இருப்பின் அடுத்த மின் கட்டணத்தில் சரி செய்யப்படும். புயலால் மின் நுகர்வோரின் இடர்பாடுகளை கருதி முதல்வர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

அபராதமின்றி வரும் 18ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .மழை பாதிப்பு வெள்ளத்தை கருத்தில் கொண்டு கூடுதல் அவகாசத்தை வழங்கி உள்ளது தமிழ்நாடு அரசு. மின் கட்டணம் செலுத்த நாளை கடைசி நாளாக இருந்த நிலையில் 4 மாவட்ட மக்களுக்கு மட்டும் கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.