ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. அமைதியான முறையில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்ளூர் நிலவரங்களைப் பொறுத்து மாவட்ட நிர்வாகம் நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். அனுமதி அளிக்க மறுத்ததற்கு போலீசார் கூறிய காரணங்கள் ஏற்கக் கூடியவை அல்ல என நீதிபதி தெரிவித்துள்ள்ளார்.

75வது சுதந்திர தினம், விஜயதசமி, அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி அக்டோபர் 22 மற்றும் 29ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் மனுதாக்கல் செய்தது.