தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் தளம் மூலமாக நடத்த திட்டமிட்டு அதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நாளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நாளை நடைபெற இருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக சற்று முன் அரசு அறிவித்துள்ளது. ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வு நிறுத்தப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.