அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் அகற்றப்பட்டு இயல்பாக சுவாசிக்கிறார் என்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது செந்தில் பாலாஜி சுய நினைவுடன் இருக்கிறார்; அவரால் உட்காரவும், பேசவும் முடிகிறது. மேலும் உணவுகளையும் உட்கொள்ளத் தொடங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.