அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் பலகோடி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். இதற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.