கோவா – மும்பை நெடுஞ்சாலையில் இன்று காலை 5 மணி அளவில் கார் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த ஒரு குழந்தை 3 பெண்கள் உட்பட 9 பேர் பலியாகினர். அதிகாலை நேரம் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.