பீகாரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் லோக் ஜன சக்தி கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் 22 பேர் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளனர். வேட்பாளர் தேர்வில் வேறு கட்சியிலிருந்து வருவோருக்கு முன்னுரிமை அளித்ததாக ராஜினாமா செய்த தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிருப்தி தலைவர்கள் INDIA கூட்டணியை ஆதரிக்க லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.