சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு ஏமாற்றிவிட்டதாக நடிகர் விஜயலட்சுமி 10 வருடத்திற்கு மேலாக வீடியோ வெளியிட்டு வந்தார். இது குறித்து சீமானும் பேசாமல் வந்த நிலையில் தான் கடந்த மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது நடவடிக்கை புகார் கொடுத்தார். இந்த விவகாரம் தமிழக முழுவதும் தெரியும். இந்த நிலையில் சீமான் கைது செய்யப்படுவார் என்று பேச்சுக்கள் அடிபட்ட நிலையில் சீமான் கொடுத்த புகாரை யாரும் எதிர்பார்க்க விதமாக விஜயலட்சுமி வாபஸ் வாங்கினார்.

இனி திரும்ப வரமாட்டேன் சீமான் சந்தோஷமாக இருக்கட்டும் என்று கூறிவிட்டு பெங்களூர் சென்றார்.. இது ஒருபுறம் இருக்க புகாரை வாபஸ் வாங்கினாலும் சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று போலீசார் அவருக்கு காவல் நிலையத்தில் சீமான் ஆஜரானார். இதோடு எல்லாம் முடிந்து விட்டது என்று நாதாக கட்சியினர் நிம்மதி பெருமூச்சு விட்ட சூழலில் இன்னும் பிரச்சினை முடிந்தபாடில்லை.

இந்நிலையில் விஜயலட்சுமி விவகாரத்தில், வீரலட்சுமியை பற்றி தவறாக பேசியதாக அவரது கணவர் கணேசன், சீமானை தொடர்பு கொண்டு, இருவரும் boxing போடலாம் என்று முன்பு கூறியிருந்தார். அதற்கு சீமானும் ரெடி என்று கூறிய நிலையில், வீரலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வருகிற தை மாதம், காணும் பொங்கல் அன்று திருவள்ளூரில் உள்ள ஒரு மைதானத்தில் boxing செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, சீமானை சண்டைக்கு அழைத்துள்ளார்.