தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (சனிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி  இன்று 15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது.

தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, விழுப்புரம், தி.மலை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை ஆகிய மாவட்டங்களில் மழை வெளுக்கும் என்றும், சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்கும் எனவும் தெரிவித்துள்ளது.