கேரள மாநிலம் ஆலப்புழா அருகே தானூர் என்ற பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் தற்போது பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 25 பேர் மட்டுமே செல்லக்கூடிய படகில் 40 பேர் வரை ஏற்றி சென்றதால் தான் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் நீருக்குள் மூளியவர்களை தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.