பாஜக மாநில தலைவரான அண்ணாமலை வீட்டின் அருகே பாஜக கொடி பறப்பதற்காக அனுமதியில்லாமல் புதிதாக அமைக்கப்பட்ட கொடி கம்பம் வைத்த போது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமலும், ஜேசிபி வாகனத்தின் கண்ணாடியை  உடைத்த வழக்கில்  பாஜகவை சேர்ந்த ஐந்து பேரை காவல்துறையினர் இன்று மாலை நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.  மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அமர்பிரசாத் ரெட்டியை தொடர்ந்து போலீசார் தேடி வந்தனர். சற்றுமுன் அவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.