தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.

அதன்பின் சிடிஆர் நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மேலும் பா.ஜ.க ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து பாஜக-அதிமுக மோதல் பூதாகரமாக வெடித்துள்ளது.

சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங் நிர்வாகிகள் கூண்டோடு அக்கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர். பாஜக ஐடி விங் மாவட்ட தலைவர் ஒரத்தி அன்பரசு தலைமையில் 13 நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக விலகினர். துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக்கொள்ளவே பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். விலகிய அனைவரும் விரைவில் அதிமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.