விரைவில் பாஜக அரசு அகற்றப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமையும், அப்போது பாஜகவின் அடியாட்களாக செயல்பட்ட ED, CBI அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அவர்களுக்கு தரும் தண்டனை இனி இது போன்று யாரும் செயல்படாத வகையில் இருக்கும், இது ராகுல் காந்தியின் GUARANTEE என உறுதி அளித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி குறித்து கடுமையான விமர்சனங்களையும் அவர் முன் வைத்தார்.