கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரத்தில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் மொபைல் கடைக்கு வெளியே மோட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சத்தியமூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை சோதனைசெய்த போது பட்டப்பகலில் கலாச்சாவியை பயன்படுத்தி அடையாளம் தெரியாத வாலிபர் மோட்டார் சைக்கிளை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.